இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

பால தேவகஜன்

நீரிழிவு

நீரிழிவு தலைப்பில்
நிலைதடுமாறினேன்
என் அப்பனை
நீள்துயில் கொள்ள வைத்து
என்னை நீங்கா வேதனையில்
தவிக்கவிட்டதும் இதே நீரிழிவுதான்.

நீரிழிவு இதனால் எத்தனை
பேரிற்கு பேரழிவு
தீரா நோயாக நுழைந்து
ஆறாத வலிகளை தந்து
நீறாக்கியது பலர் வாழ்வை.

சிறுநீர் கழிக்கும்
தடவைகளும் அதிகரிக்கும்
சீறிச் சினக்கும்
குணங்களும் ஆர்பரிக்கும்
சீர்கெட்ட நோயிது.

பஞ்சி குடியேறும்
பசி குடியெழுப்பும்
பக்குவம் படலைதட்டும்
பரிகாச நோயிது

நலிவு கொள்ளும்
தெளிவு குன்றும்
காயங்கள் ஆற
கனகாலம் எடுக்கும்
கனதியான நோயிது.

உனக்குள்ளே கட்டுப்பாடு
இருக்கும் வரையில்
நெருங்காது இந்த நோய்
என்ற எண்ணத்தோடு
பக்குவமாய் நடந்துகொள்
பாரிலே நிமிர்ந்து நில்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading