முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பால தேவகஜன்

நீரிழிவு

நீரிழிவு தலைப்பில்
நிலைதடுமாறினேன்
என் அப்பனை
நீள்துயில் கொள்ள வைத்து
என்னை நீங்கா வேதனையில்
தவிக்கவிட்டதும் இதே நீரிழிவுதான்.

நீரிழிவு இதனால் எத்தனை
பேரிற்கு பேரழிவு
தீரா நோயாக நுழைந்து
ஆறாத வலிகளை தந்து
நீறாக்கியது பலர் வாழ்வை.

சிறுநீர் கழிக்கும்
தடவைகளும் அதிகரிக்கும்
சீறிச் சினக்கும்
குணங்களும் ஆர்பரிக்கும்
சீர்கெட்ட நோயிது.

பஞ்சி குடியேறும்
பசி குடியெழுப்பும்
பக்குவம் படலைதட்டும்
பரிகாச நோயிது

நலிவு கொள்ளும்
தெளிவு குன்றும்
காயங்கள் ஆற
கனகாலம் எடுக்கும்
கனதியான நோயிது.

உனக்குள்ளே கட்டுப்பாடு
இருக்கும் வரையில்
நெருங்காது இந்த நோய்
என்ற எண்ணத்தோடு
பக்குவமாய் நடந்துகொள்
பாரிலே நிமிர்ந்து நில்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading