” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பால தேவகஜன்

நீரிழிவு

நீரிழிவு தலைப்பில்
நிலைதடுமாறினேன்
என் அப்பனை
நீள்துயில் கொள்ள வைத்து
என்னை நீங்கா வேதனையில்
தவிக்கவிட்டதும் இதே நீரிழிவுதான்.

நீரிழிவு இதனால் எத்தனை
பேரிற்கு பேரழிவு
தீரா நோயாக நுழைந்து
ஆறாத வலிகளை தந்து
நீறாக்கியது பலர் வாழ்வை.

சிறுநீர் கழிக்கும்
தடவைகளும் அதிகரிக்கும்
சீறிச் சினக்கும்
குணங்களும் ஆர்பரிக்கும்
சீர்கெட்ட நோயிது.

பஞ்சி குடியேறும்
பசி குடியெழுப்பும்
பக்குவம் படலைதட்டும்
பரிகாச நோயிது

நலிவு கொள்ளும்
தெளிவு குன்றும்
காயங்கள் ஆற
கனகாலம் எடுக்கும்
கனதியான நோயிது.

உனக்குள்ளே கட்டுப்பாடு
இருக்கும் வரையில்
நெருங்காது இந்த நோய்
என்ற எண்ணத்தோடு
பக்குவமாய் நடந்துகொள்
பாரிலே நிமிர்ந்து நில்.

Nada Mohan
Author: Nada Mohan