இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

பால தேவகஜன்

ஊட்டி வளர்த்த உன்னை
ஒருமுறை பார்க்க ஆசை!
வாட்டிய வறுமையிலும்
காட்டிய உனது அன்பு
நீட்டிய என் வாழ்வில்
நிலைத்தே இருக்குதின்றும்.

அழகளகாய் கதைசொல்லி
ஆராரோ பாட்டிசைத்து
மடியில் என்னை தாலாட்டி
தூங்கவைச்ச நினைவுகள்
தூங்காமல் இன்றும் எனக்குள்ளே!

நிலா காட்டி சோறு ஊட்டி
ஆளாக்கிவிட்ட என் பாட்டி!
நீ தந்த பாசங்கள்
நித்தமும் வேண்டும் எனக்கு.
மீண்டும் ஒரு பிறப்பில்
உன் அரவணைப்பில்
நான் வளர்ந்திட பாக்கியம்
தந்திடு என் அன்பு பாட்டியே!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading