மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

பால தேவகஜன்

ஊட்டி வளர்த்த உன்னை
ஒருமுறை பார்க்க ஆசை!
வாட்டிய வறுமையிலும்
காட்டிய உனது அன்பு
நீட்டிய என் வாழ்வில்
நிலைத்தே இருக்குதின்றும்.

அழகளகாய் கதைசொல்லி
ஆராரோ பாட்டிசைத்து
மடியில் என்னை தாலாட்டி
தூங்கவைச்ச நினைவுகள்
தூங்காமல் இன்றும் எனக்குள்ளே!

நிலா காட்டி சோறு ஊட்டி
ஆளாக்கிவிட்ட என் பாட்டி!
நீ தந்த பாசங்கள்
நித்தமும் வேண்டும் எனக்கு.
மீண்டும் ஒரு பிறப்பில்
உன் அரவணைப்பில்
நான் வளர்ந்திட பாக்கியம்
தந்திடு என் அன்பு பாட்டியே!

Nada Mohan
Author: Nada Mohan