நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

பால தேவகஜன்

ஊட்டி வளர்த்த உன்னை
ஒருமுறை பார்க்க ஆசை!
வாட்டிய வறுமையிலும்
காட்டிய உனது அன்பு
நீட்டிய என் வாழ்வில்
நிலைத்தே இருக்குதின்றும்.

அழகளகாய் கதைசொல்லி
ஆராரோ பாட்டிசைத்து
மடியில் என்னை தாலாட்டி
தூங்கவைச்ச நினைவுகள்
தூங்காமல் இன்றும் எனக்குள்ளே!

நிலா காட்டி சோறு ஊட்டி
ஆளாக்கிவிட்ட என் பாட்டி!
நீ தந்த பாசங்கள்
நித்தமும் வேண்டும் எனக்கு.
மீண்டும் ஒரு பிறப்பில்
உன் அரவணைப்பில்
நான் வளர்ந்திட பாக்கியம்
தந்திடு என் அன்பு பாட்டியே!

Nada Mohan
Author: Nada Mohan