அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

பால தேவ கஜன்

அந்த ஒற்றை மணிக்காகவே
காத்திருப்போம்
அவர்கள் கல்லறை நோக்கியே
நாம் நகர்வோம்.

அடித்த மணி ஓய்வுகொள்ள
நாமும் அமைதிகொள்வோம்
அந்த உன்னதமானவர்களை
மனமிருத்தி தொழுதே நிற்போம்.

நிரம்பி வழிகின்ற
கண்ணீர் துளிகள்
கல்றைகளை நனைக்க
காவியநாயகர்கள் கண்திறப்பார்.

தணியாத தாகத்தோடு
அணியாக நின்றவர்கள்
பணியாத வீரம்காட்டி
மண்ணின் மணியாகி
மகத்துவம் ஆனார்கள்.

கார்த்திகை மாதம்
எங்களின் கண்ணியமாதம்
எமக்காக உயிர்தந்த
உன்னதமானவர்களை
உள்ளத்தில் நினைந்து
உருகும் மாதம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading