பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பால தேவ கஜன்

அந்த ஒற்றை மணிக்காகவே
காத்திருப்போம்
அவர்கள் கல்லறை நோக்கியே
நாம் நகர்வோம்.

அடித்த மணி ஓய்வுகொள்ள
நாமும் அமைதிகொள்வோம்
அந்த உன்னதமானவர்களை
மனமிருத்தி தொழுதே நிற்போம்.

நிரம்பி வழிகின்ற
கண்ணீர் துளிகள்
கல்றைகளை நனைக்க
காவியநாயகர்கள் கண்திறப்பார்.

தணியாத தாகத்தோடு
அணியாக நின்றவர்கள்
பணியாத வீரம்காட்டி
மண்ணின் மணியாகி
மகத்துவம் ஆனார்கள்.

கார்த்திகை மாதம்
எங்களின் கண்ணியமாதம்
எமக்காக உயிர்தந்த
உன்னதமானவர்களை
உள்ளத்தில் நினைந்து
உருகும் மாதம்.

Nada Mohan
Author: Nada Mohan