” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பிறப்பின் புதுமை

Jeya Nadesan

கவிதை நேரம்-19.12.2024
கவி இலக்கம்-1968
பிறப்பின் புதுமை
——————-
மண்ணிலே புதுமை நடந்தது உண்மை
விண்ணிலே பாலன் விடி வெள்ளியானது நன்மை
தேவனின் மாண்பில் கருவானார் உண்மை
அன்னை மரியாள் மடிதனில் தவழ்ந்தது மேன்மை
கொட்டிடும் பனியில் பாலகனின் சத்தம்
மாட்டு தொழுவமதில் பிறப்பின் சித்தம்
வானவர் புடை சூழ நின்றது நாட்டம்
இன்னிசை பாடியவர் இடையர் கூட்டம்
வானவர் தோழமையில் வாழ்த்திய மழலை
ஆயர்கள் கூட்டம் போற்றிய மகிமை
ஞானிகள் கூடி வாழ்த்திய குழந்தை
அதுவே இயேசு பாலனின் பிறப்பு வருகை
உலகில் துன்பம் போக்கவே பிறப்பாய்
மனிதம் மலர்ந்திட வருவாய் நிறைவாய்
உத்தமனாய் பிறப்பீர் தேவனே எமக்காய்
புனிதம் நிலைத்திட புண்ணியவனாய்

Nada Mohan
Author: Nada Mohan