புலவர்மணி இளமுருகனார்

ரஜனி அன்ரன் (B.A) “புலவர்மணி இளமுருகனார்“ 12.06.2025

ஈழத்து தமிழறிஞர் தமிழ் உணர்வாளர்
தமிழாசான் நாடகஆசான் கண்டனஆசானென
பன்முகத் திறமைகொண்ட புலவர்மணிஐயா
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர்
நவாலியில் உதித்தாரே ஆனித்திங்கள் பதினொன்றிலே !

செந்தமிழ்மரபு சிதைந்து போவதுகண்டு
நொந்தார் மனம்வெந்தார் புலவர்மணிஐயா
கட்டுரைகள் கண்டன உரைகளென
சட்டெனவே எழுதினார் வாரப்பத்திரிகைக்கு
பண்டிதர் பரீட்சையும் எழுதிப் பண்டிதராகி
பாடநூல்கள் பலதையும் யாத்து
பண்டிதர்கள் பலரையும் உருவாக்கினாரே !

தமிழுக்கு பாதுகாப்புக் கழகத்தையும் நிறுவி
தனித்தமிழின் தூய்மையை நிலைநாட்டி
தமிழுக்கு கவிதை உரைநடையென்று
படைப்புக்கள் பலதையும்தந்து
கலைச்சொல் ஆக்கத்திற்கு பணியுமாற்றி
தொண்டுகள் செய்தாரே தமிழுக்கு!

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading