புலவர்மணி இளமுருகனார்

ரஜனி அன்ரன் (B.A) “புலவர்மணி இளமுருகனார்“ 12.06.2025

ஈழத்து தமிழறிஞர் தமிழ் உணர்வாளர்
தமிழாசான் நாடகஆசான் கண்டனஆசானென
பன்முகத் திறமைகொண்ட புலவர்மணிஐயா
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர்
நவாலியில் உதித்தாரே ஆனித்திங்கள் பதினொன்றிலே !

செந்தமிழ்மரபு சிதைந்து போவதுகண்டு
நொந்தார் மனம்வெந்தார் புலவர்மணிஐயா
கட்டுரைகள் கண்டன உரைகளென
சட்டெனவே எழுதினார் வாரப்பத்திரிகைக்கு
பண்டிதர் பரீட்சையும் எழுதிப் பண்டிதராகி
பாடநூல்கள் பலதையும் யாத்து
பண்டிதர்கள் பலரையும் உருவாக்கினாரே !

தமிழுக்கு பாதுகாப்புக் கழகத்தையும் நிறுவி
தனித்தமிழின் தூய்மையை நிலைநாட்டி
தமிழுக்கு கவிதை உரைநடையென்று
படைப்புக்கள் பலதையும்தந்து
கலைச்சொல் ஆக்கத்திற்கு பணியுமாற்றி
தொண்டுகள் செய்தாரே தமிழுக்கு!

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading