” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புலவர்மணி இளமுருகனார்

ரஜனி அன்ரன் (B.A) “புலவர்மணி இளமுருகனார்“ 12.06.2025

ஈழத்து தமிழறிஞர் தமிழ் உணர்வாளர்
தமிழாசான் நாடகஆசான் கண்டனஆசானென
பன்முகத் திறமைகொண்ட புலவர்மணிஐயா
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர்
நவாலியில் உதித்தாரே ஆனித்திங்கள் பதினொன்றிலே !

செந்தமிழ்மரபு சிதைந்து போவதுகண்டு
நொந்தார் மனம்வெந்தார் புலவர்மணிஐயா
கட்டுரைகள் கண்டன உரைகளென
சட்டெனவே எழுதினார் வாரப்பத்திரிகைக்கு
பண்டிதர் பரீட்சையும் எழுதிப் பண்டிதராகி
பாடநூல்கள் பலதையும் யாத்து
பண்டிதர்கள் பலரையும் உருவாக்கினாரே !

தமிழுக்கு பாதுகாப்புக் கழகத்தையும் நிறுவி
தனித்தமிழின் தூய்மையை நிலைநாட்டி
தமிழுக்கு கவிதை உரைநடையென்று
படைப்புக்கள் பலதையும்தந்து
கலைச்சொல் ஆக்கத்திற்கு பணியுமாற்றி
தொண்டுகள் செய்தாரே தமிழுக்கு!