நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

புலவர்மணி இளமுருகனார்

ரஜனி அன்ரன் (B.A) “புலவர்மணி இளமுருகனார்“ 12.06.2025

ஈழத்து தமிழறிஞர் தமிழ் உணர்வாளர்
தமிழாசான் நாடகஆசான் கண்டனஆசானென
பன்முகத் திறமைகொண்ட புலவர்மணிஐயா
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர்
நவாலியில் உதித்தாரே ஆனித்திங்கள் பதினொன்றிலே !

செந்தமிழ்மரபு சிதைந்து போவதுகண்டு
நொந்தார் மனம்வெந்தார் புலவர்மணிஐயா
கட்டுரைகள் கண்டன உரைகளென
சட்டெனவே எழுதினார் வாரப்பத்திரிகைக்கு
பண்டிதர் பரீட்சையும் எழுதிப் பண்டிதராகி
பாடநூல்கள் பலதையும் யாத்து
பண்டிதர்கள் பலரையும் உருவாக்கினாரே !

தமிழுக்கு பாதுகாப்புக் கழகத்தையும் நிறுவி
தனித்தமிழின் தூய்மையை நிலைநாட்டி
தமிழுக்கு கவிதை உரைநடையென்று
படைப்புக்கள் பலதையும்தந்து
கலைச்சொல் ஆக்கத்திற்கு பணியுமாற்றி
தொண்டுகள் செய்தாரே தமிழுக்கு!