நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

பூக்களின் புது வசந்தம் கவி இல(128) 11/04/24

பூக்களின் புது வசந்தம்

உதயங்கள் தேடும் இதயங்களில்
வண்ண வண்ண மலர் வனமாய்
பாரெங்கும் பரந்திருக்கும்
பூக்களின் புது வசந்தம்

வானத்து வானவில்லின்வண்ணங்கள்
எம் சிந்தையை மயக்க
சுகந்த வாசம் எங்கும் நிறைந்து
எம்மை ஈர்க்க

மலர்களை சுற்றி ரீங்காரமிட்டு
தேனுண்டு மதிமயங்கும்
பொன் வண்டுக் கூட்டங்களும்
பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளும்

கொத்துக் கொத்தாய்
அடுக்கடுக்காய்
பூத்துக் குலுலுங்கும்
மலரினங்கள்

பூமிக்கு அழகாய்
சரங்களாய் மாலைகளாய்
பெண்களின் தலையில் ஒய்யாரமாய்
அர்ச்சனை மலராய் புது மலர்கள்
இறை பதம் அலங்கரிக்குது
வசந்த மலர்களாய்
நன்றி வணக்கம்்

Nada Mohan
Author: Nada Mohan

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading