பூக்களின் புது வசந்தம் கவி இல(128) 11/04/24

பூக்களின் புது வசந்தம்

உதயங்கள் தேடும் இதயங்களில்
வண்ண வண்ண மலர் வனமாய்
பாரெங்கும் பரந்திருக்கும்
பூக்களின் புது வசந்தம்

வானத்து வானவில்லின்வண்ணங்கள்
எம் சிந்தையை மயக்க
சுகந்த வாசம் எங்கும் நிறைந்து
எம்மை ஈர்க்க

மலர்களை சுற்றி ரீங்காரமிட்டு
தேனுண்டு மதிமயங்கும்
பொன் வண்டுக் கூட்டங்களும்
பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளும்

கொத்துக் கொத்தாய்
அடுக்கடுக்காய்
பூத்துக் குலுலுங்கும்
மலரினங்கள்

பூமிக்கு அழகாய்
சரங்களாய் மாலைகளாய்
பெண்களின் தலையில் ஒய்யாரமாய்
அர்ச்சனை மலராய் புது மலர்கள்
இறை பதம் அலங்கரிக்குது
வசந்த மலர்களாய்
நன்றி வணக்கம்்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading