பூமி 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025

ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி உயிர்களின் இருப்பிடம்
கொடுக்கின்றாய் தீரா நல்வளம்!

விதையென விழுந்தால் விருட்சமும்
வீணாகிப் போனால் பசளையும்
பச்சைப் போர்வை போர்த்தி,
பஞ்சமின்றி எம்மைக் காத்து

அடர்ந்த காடெல்லாம் அழகு
அமைதியாய் ஓடும் நதியழகு
வர்ணப் பூக்கள் அழகு
வான்மழை மேகமும் அழகு

நிலக்கரி, தங்கம், நிதிகளென நிலத்தினுள் பல வரங்களென
உயிர்களின் பசியும், உறக்கமும்
உனது இயக்கத்தில் அடக்கமும்

இயற்கை வளத்தை அளிப்பவளே
எதிர்கால சந்ததி சிறப்பதற்கென
வீட்டிற்கு ஒரு மரம் நாட்டி
வீண் அழிவுகளை அகற்றி பூமி காப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading