மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பூம்பனி கொட்டுது

நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது

பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம் பொழியுது
வண்ணமாய் இருக்குது காலை

நிறைபனி பொழியுது நிலமும் மூடுது
நீண்ட நேரம் இருளாக
வெள்ளையாய் கொட்டுது வெண்பனிச்சரால்
துள்ளியே மகிழுது தூரத்து விடியல்

அள்ளியே கையில் வைத்திட நாமும்
அகன்று செய்லுது பனியின் துகள்கள்;
கிள்ளி எறிந்திடும் மாணவமணிகளும்
துள்ளி விளையாடுவர் தூசிப்பனியில்

இயற்கையின் விந்தை இதுவென நாமும்
இணைந்து வாழ்தல் நலமன்றோ!
முயற்சியைக் கூட்டி முனைந்து நீயும்
முன்பனிக் காலை விடியலைப் பாரு!!

நகுலா சிவநாதன்1843

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading