29
Jul
ராணி சம்பந்தர்
பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே
உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே
நடமாடும் மனிதர்...
29
Jul
30.07.2026 “நட்பென்றாலே”2043 ஜெயா நடேசன்
நட்பு என்பது மலரைப்போல அல்ல
ஒரு நாளில் பூத்து குலுங்கி உதிரும்
வானில் தோன்றும் நட்சத்திரம்
வானம்...
29
Jul
(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026
நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன்
அன்பு அரவணைப்பு
என்றும் கைகொடுப்பு
ஆபத்தில் அறிந்து
துணையாகும் சிறப்பு
அகிலத்தில் நட்பு
நல்லதொரு...
பெஞ்சால் புயல்
rராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
05.12.24
ஆக்கம் 341
பெஞ்சால் புயல்
“பெஞ்சால் புயல்” புதுப்
பெயரில் போட்டு
வாங்குது
மழையோ கொட்டிக்
கொட்டி வயல், வரம்பு
முட்டி முட்டித் தேங்குது
ஆறு, குளம் உடைத்து
வெட்டிப் பாய்ந்து ஓடுது
பாம்பு,முதலை குடைந்து குதறுது
ஆடும்,மாடும் தவித்து ஆட்களுடன் சேர்ந்து
மிதந்து அலறுது
காலங்காலமாய் அடர்ந்து படர்ந்த
பல்லாண்டு வளர்ந்த
மரமோ அடி வேரோடு
கிளம்புது
அங்குமிங்கும் மாந்தர்
வீட்டை விட்டு வெளியேற வழி
இன்றித் தவித்திட
இளசுகளோ நாட்டு
நடப்பைக் கூட்டிப்
பெருக்கி வலை
ஒளியில் இல்லாத
பொல்லாத அல்லாத
கதை சொல்லி ஓடி
ஓடி நீச்சலடிக்கிறாரே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...