பெண்களைப் போற்றவோம்

பகுதி 2
சக்தி சிறினிசங்கர்
பேறு பெற்றவள் பெண்ணே அறிவாய்
ஆறுதல் அளித்திட அருகினில் இருப்பாள்
மாட்சியும் பெற்ற மாதரும் தானே
ஆட்சியில் அவளை அண்டவும் கூடுமோ
காட்சிப் பொருள்அல்ல காமப்பொருள் அல்ல
சாட்சியாய் வாழ்ந்து சாதனை படைப்பவள்
தூற்றுதல் வேண்டாம் தூக்கியே விடுவாய்
போற்றுதல் தகுமே பொற்காலம் உனக்கு!

கவிதைத் தொகுப்பாளினிகட்கு நன்றி!
திரு.திருமதி.நடா மோகனுகாகு நன்றி!
அனைத்துக் கவிப்படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடன் விடைபெற்றுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

Author: