பொங்குவாய்

அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை பேசுவார்கள் பலவாய்

உண்மையின் மகனாக எழுவாய்
தன்னலம் அகற்றி தெளிவாய்
கடவுளை நம்பியே தொழுவாய்
நடப்பவை நடந்திடும் வலுவாய்

உலக நடப்பினை அறிவாய்
பழுதான மனிதரை புரிவாய்
நடிப்பவர் வேடத்தை உரிவாய்
விடிவொன்று வரட்டுமே முடிவாய்

தொடங்கியே போராட்டத்தை தொடர்வாய்
அடங்கிடும் அநியாயம் அதுவாய்
மாற்றங்கள் நிகழ்ந்திடும் மெதுவாய்
சேற்றுக்குள்ளும் செந்தாமரையாய் தெரிவாய்

ஜெயம்
19-12-2025

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading