சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம்.
வியாழன் கவிதை நேரம்.

இல.514
வரவேற்போம் வாழ்த்திடுவோம்.
**************************************

ஆங்கில வருடமோ அவனியில் உதித்திருக்க.
அடுத்தது பொங்கல் என்று , முரசு மது கொட்டி முழங்க.

அமளியுடன் , ஆரவாரம், ஆதவர்க்கு விருந்துபசாரம்
தலைமகளாம் ,தை மகளுக்குத் , தரணியெங்கும் , பெருமையுடன் புகழாரம்.

தேசம் பசிதீர்கப், பாதம் நனைத்து ப், பயிர் வளர்த்துத் தந்தவர்ககு.
பாசம் கலந்து, பாரம்தனைச் சுமந்து , பரிவுடன் உளைத்தவர்க்கு.

வேகும் வயிறதுவோ, வதங்காமல் இருப்பதற்கு.
வியர்வை வழித்தெறிந்து, வாடாது உழைத்தவர்க்கு.
சூட்டிடுவோம் பொன்னாரம் , வாழ்த்திடுவோம், புவியது இருக்கும் வரை.
பொன்.தர்மா
.

Nada Mohan
Author: Nada Mohan