சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
“””””””””” பரவசம் “””””'””””
பந்தலிலே பாட்டு, பாமுகத்தில் கூத்து.
பாவை அண்ணா நாவில், சரசமாடும் , தமிழின் குழல் வேட்டு.
பரவசம்

சின்னஞ் சிறிசுகள் , பாமுகத்தில் கூடியே குலாவுதல் பரவசம்.
செந்தமிழ் அதனையே, கசக்கிப் பிழிந்துமே , எடுத்துக் கொடுப்பரே , அவர், தமிழ் ரசம்.

முன்றலில் இருப்பவர், மூச்சது தமிழ் என , மூழ்கியே நிற்பதும் ,ஒரு ரகம்.

தென்றலில் ஆடிடும், திவ்விய மலர்களும், தக்கிடத் , திமி எனக், காட்டுமே , நவரசம்.

பாமுகப் பந்தலில் ,ஒன்றாகவே சேர்ந்து, உணர்வொடு , கவி , படிப்பது பரவசம்.

பச்சைப் பிள்ளை முகம், பளிச்சென்று கண்டதும், பட்டதெல்லாம் மறந்து , துளிர் விடும் ,பரவசம்.
பரவசம் , பரவசம்
முற்றத்திலே நின்று, முழுமதி பார்த்தால் , பத்தும் , பறக்க வைக்கும் பரவசம்.
பரவசம்…..
. பரவசம்.
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan