இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
“””””””””” பரவசம் “””””'””””
பந்தலிலே பாட்டு, பாமுகத்தில் கூத்து.
பாவை அண்ணா நாவில், சரசமாடும் , தமிழின் குழல் வேட்டு.
பரவசம்

சின்னஞ் சிறிசுகள் , பாமுகத்தில் கூடியே குலாவுதல் பரவசம்.
செந்தமிழ் அதனையே, கசக்கிப் பிழிந்துமே , எடுத்துக் கொடுப்பரே , அவர், தமிழ் ரசம்.

முன்றலில் இருப்பவர், மூச்சது தமிழ் என , மூழ்கியே நிற்பதும் ,ஒரு ரகம்.

தென்றலில் ஆடிடும், திவ்விய மலர்களும், தக்கிடத் , திமி எனக், காட்டுமே , நவரசம்.

பாமுகப் பந்தலில் ,ஒன்றாகவே சேர்ந்து, உணர்வொடு , கவி , படிப்பது பரவசம்.

பச்சைப் பிள்ளை முகம், பளிச்சென்று கண்டதும், பட்டதெல்லாம் மறந்து , துளிர் விடும் ,பரவசம்.
பரவசம் , பரவசம்
முற்றத்திலே நின்று, முழுமதி பார்த்தால் , பத்தும் , பறக்க வைக்கும் பரவசம்.
பரவசம்…..
. பரவசம்.
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading