பொன்.தர்மா

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்.
******** முருகன், வேலன், கந்தன்*
————+——+++—–+————-
அறுபடை வீடு, அமர்ந்திருக்கும் முருகன்.- அவர்
அன்பர் உள்ளம் , கொள்ளை கொள்ளும் அழகன்.

முத்தமிழின் முகவரியாய், பவனி வரும் கந்தன்.
தண்டத்தை ஏந்திக், தரணி ஆளும் தனையன்.

வேல் கொண்டு , வீரத்தினை, விண்ணவரும் மண்ணவரும் , அறிய வைத்தவர்.
வேலினைக் கொண்டே , வெற்றிவாகை சூடிய வேலவர்.

சூரனைக் கூறு செய்து, சேவலும் மயிலும் , ஆக்கிய செந்தூரான்.
சீர் ஓங்க அறிவு தரும், சிங்காரத் தேவன் மலைச் சிவபாலன்.
அன்னையின் சக்தியை, அகிலமே அறிய வைத்த, அகிலாண்டேஸ்வரி மைந்தன்.
அன்புடை மைந்தராய், உயர்ந்த நல் குருவாய், ஆசைமிகு சோதரனாய் , மகிழ்ச்சி தரும் பெருமானார்.
முருகன், வேலன், கந்தன்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading