அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.522.
****உன்னதமே உன்னதமாய்****
ஆறறிவு கொடுத்து,அகிலத்தில் முதலாக்கி-
பாரினிலே பெருமைகொள், படைப்பதனைத் தந்ததுமே,உன்னதமே.

வாழ்வுதனைக் கொடுத்து , வளங்கள் பல சேர்த்து,
தாழ்விலா, தலை நிமிர்ந்து, நடைபோட வைத்ததுமே.
கண்களுக்கு விருந்து அளித்து , கொடு நோய்க்கு மருந்தளித்து

அண்டத்தின் அசைவுக்காய், அயராது விழித்திருந்து .
தெண்டாட்டம் காணாது, தூணாகத் தோள் கொடுப்பு .
உன்னதமே..
. விளக்கிற்கு எரி பொருளாய் , திரியதற்குத் தூண்டியுமாய் .
இரதத்திற்கு , அச்சாணியாக, நாண் பிடிக்கும் நாயகனாய்த் , திகழ்வதுவும்,
…..உன்னதமே…..
உலகிற்கே ஒருத்தராய் ,உயர்ந்திருக்கும்,உன்னதரே.
உன்னதமே உன்னதமாய்.

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading