மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.522.
****உன்னதமே உன்னதமாய்****
ஆறறிவு கொடுத்து,அகிலத்தில் முதலாக்கி-
பாரினிலே பெருமைகொள், படைப்பதனைத் தந்ததுமே,உன்னதமே.

வாழ்வுதனைக் கொடுத்து , வளங்கள் பல சேர்த்து,
தாழ்விலா, தலை நிமிர்ந்து, நடைபோட வைத்ததுமே.
கண்களுக்கு விருந்து அளித்து , கொடு நோய்க்கு மருந்தளித்து

அண்டத்தின் அசைவுக்காய், அயராது விழித்திருந்து .
தெண்டாட்டம் காணாது, தூணாகத் தோள் கொடுப்பு .
உன்னதமே..
. விளக்கிற்கு எரி பொருளாய் , திரியதற்குத் தூண்டியுமாய் .
இரதத்திற்கு , அச்சாணியாக, நாண் பிடிக்கும் நாயகனாய்த் , திகழ்வதுவும்,
…..உன்னதமே…..
உலகிற்கே ஒருத்தராய் ,உயர்ந்திருக்கும்,உன்னதரே.
உன்னதமே உன்னதமாய்.

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan