பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.522.
****உன்னதமே உன்னதமாய்****
ஆறறிவு கொடுத்து,அகிலத்தில் முதலாக்கி-
பாரினிலே பெருமைகொள், படைப்பதனைத் தந்ததுமே,உன்னதமே.

வாழ்வுதனைக் கொடுத்து , வளங்கள் பல சேர்த்து,
தாழ்விலா, தலை நிமிர்ந்து, நடைபோட வைத்ததுமே.
கண்களுக்கு விருந்து அளித்து , கொடு நோய்க்கு மருந்தளித்து

அண்டத்தின் அசைவுக்காய், அயராது விழித்திருந்து .
தெண்டாட்டம் காணாது, தூணாகத் தோள் கொடுப்பு .
உன்னதமே..
. விளக்கிற்கு எரி பொருளாய் , திரியதற்குத் தூண்டியுமாய் .
இரதத்திற்கு , அச்சாணியாக, நாண் பிடிக்கும் நாயகனாய்த் , திகழ்வதுவும்,
…..உன்னதமே…..
உலகிற்கே ஒருத்தராய் ,உயர்ந்திருக்கும்,உன்னதரே.
உன்னதமே உன்னதமாய்.

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading