சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ப.வை. ஜெயபாலன்

கோடையுடன் கூடி விளையாட ,மாசி ஆடை அவிழ்க்கும் குளிர் பனிக்குள் ஒரு கேரள சுற்றுலா.காலா காலமாக கம்யூனிஸ்ட் கட்சியே ஆளும் மாநிலம்.நீர் வளம் நிறைந்த மண் என்பதை குறித்து கூறும் ஊர்களின் பெயர்களிலும் குளம்.வளத்தின் எழிலை எங்கும் உமிழும் பச்சைய பசுமை.தென் இந்திய கலை கலாசாரத்தை தன்னுள் பேணும் பிரதேசம்.விஷ்ணு,சிவன் தலங்கள் . சில ஆயிரம் ஆண்டுகளை தாண்டியும் மத வீரியம் குறையாது நித்தம் பல ஆயிரம் பக்தர்களை ஈர்க்கும் ஆலயங்கள் காணும் அற்புதம்.மலை தொடரில் வளையல் வீதிகளின் அழகு கோலம்.தேயிலை,ஏலம்,கறுவா என பொலியும் மண்ணின் மகிமை.தென்றலின் தாளத்துக்கு ஓலைகள் ஆட தலைக்கனம் காட்டும் தென்னைகள் .கடலிலும் நதிகளிலும் கனத்ததுள்ள மீன் வளம் .வனப்பான எழிலோடு வலம் வரும் வனிதையர்.சும்மாவா சொன்னான் பாரதி .”சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்நாட்டு இளம் பெண்களோடு தோணிகள் ஓட்டி மகிழ்க என…”

Nada Mohan
Author: Nada Mohan