மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 262
23/04/2024 செவ்வாய்
“நேரம்”
———
மந்த மாருதமென வீசும்!
மாலை மலருமவ் நேரம்!
சந்ததம் செவ்வாய் கூடும்!
சந்தமுடன் சிந்து பாடும்!

பந்தம் கொண்டிங்கு பாவலர்,
பாடுவர், கவிபல போடுவர்!
சிந்தையில் உந்திடும் கவிஞர்,
சீர்பெற வேண்டிட வாழ்த்துவர்!

வாழ்வினில் வந்திடும் நேரம்,
வகைகள் இரண்டென ஆகும்!
ஊழ்வினை செய்திட்ட பாவம்,
உனக்கது வந்திங்கு சேரும்!

நல்லவை நல்லதைக் கூட்டும்!
நலமதை உன்னிடம் சேர்க்கும்!
பொல்லவை பொருமிடும் நேரம்,
பொங்கிட விளைந்திடும் கோரம்!

நல்லவை செய்வதற்கு நேரம்,
நண்ணிடும் போததைப் பாரும்!
இல்லையேல் தவறிடும் யோகம்!
ஈற்றினில், இதயமே நோகும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading