சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 262
23/04/2024 செவ்வாய்
“நேரம்”
———
மந்த மாருதமென வீசும்!
மாலை மலருமவ் நேரம்!
சந்ததம் செவ்வாய் கூடும்!
சந்தமுடன் சிந்து பாடும்!

பந்தம் கொண்டிங்கு பாவலர்,
பாடுவர், கவிபல போடுவர்!
சிந்தையில் உந்திடும் கவிஞர்,
சீர்பெற வேண்டிட வாழ்த்துவர்!

வாழ்வினில் வந்திடும் நேரம்,
வகைகள் இரண்டென ஆகும்!
ஊழ்வினை செய்திட்ட பாவம்,
உனக்கது வந்திங்கு சேரும்!

நல்லவை நல்லதைக் கூட்டும்!
நலமதை உன்னிடம் சேர்க்கும்!
பொல்லவை பொருமிடும் நேரம்,
பொங்கிட விளைந்திடும் கோரம்!

நல்லவை செய்வதற்கு நேரம்,
நண்ணிடும் போததைப் பாரும்!
இல்லையேல் தவறிடும் யோகம்!
ஈற்றினில், இதயமே நோகும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan