” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 291
07/01/2025 செவ்வாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
———————————
மெல்ல விலகுது பழையது!
மெதுவாய் நுழையுது புதியது!
அல்லல் துன்பமும் அகலுமா!
அடுத்த புத்தாண்டு சிறக்குமா!

இருபத்து நான்கில் இனித்தது,,
இதயம் முழுவதும் நிறைத்தது..
இருபத் தைந்திலும் இருக்குமா!
இன்பம் நிறைவாய் கிடைக்குமா!

மத்திய கிழக்கு வெளிக்குமா!
மகிழ்வு தந்திடப் பிறக்குமா!
சத்தியம் நேர்மை ஜெயிக்குமா!
சகலதும் நன்மையில் முடியுமா!

சரித்திர மாற்றம் நிலைக்குமா!
சரியாய் தொடர்நடை போடுமா!
நரித்தனம் மீண்டும் நுழையுமா!
நம்மவர் வாழ்க்கையும் சிதறுமா!

இல்லாமை இல்லாது ஒழியட்டும்!
இருப்பவர் கைகளும் நீளட்டும்!
கல்லாமை அறவே போகட்டும்!
கற்றவர் நிலைகளும் உயரட்டும்!

சாந்தி சமாதானம் நிலவட்டும்!
சாதி வியாதியும் அகலட்டும்!
காந்திகள் மீண்டும் தோன்றட்டும்!
களைதரு புத்தாண்டு பூக்கட்டும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan