இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 294
04/02/2025 செவ்வாய்
மாசி
———
ஆங்கிலத்தில் இலக்கம் இரண்டு!
ஆனால் எமக்கோ பதினொன்று!
ஆங்கிலத்தில் நாள் இருபத்தேழு!
ஆனாலும் லீப்பில் கூடிடும் ஒன்று!

தையின் தங்கையாய் ஆனவள்!
தணலாம் பங்குனிக்கு மூத்தவள்!
பொய் மழை காண் பூவையவள்!
பொன்னு நெல்மணி தருபவள்!

மாமாங்க மகம் தீர்த்தம் தருமே!
மகத்தான சிவன் விழா வருமே!
தெம்மாங்கு கூட்டம் சேருமே!
தேவனவன் அருள் சொரியுமே!

சிவராத்திரி விரத நாள் வருமே!
சிவனின் ரதம் சீராய் நகருமே!
தவமிருந்த முனி நினைவு வருமே!
தலத்தில் அதிக கூட்டம் கூடுமே!

தை, மாசி தந்திடும் குளிரால்,
தயங்கி வரும் சூரியன் வரவால்,
வையகத் துறங்கு என முன்னோர்
வாய்மொழியாய் விதி சொன்னார்!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading