” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 221
09/05/2923 செவ்வாய்
“காணி”
———-
அம்மா வழிக் காணியது!
அளந்து பகிர்ந்து தந்தது!
சும்மா கிடந்த நிலமது!
சுற்றம் இன்றித் தவித்தது!

வல்லைக் காணி போன்றது!
வரண்டு இருந்த நிலமது!
எல்லைக் கல்லு இருந்தது!
எனினும் வேலி அற்றது!

முள்ளும் கல்லும் நிறைந்தது!
மூங்கில் மரமும் நின்றது!
கள்ளுப் பனையும் நின்றது!
கறையான் புற்றும் இருந்தது!

அல்லல் எதுவும் அற்றது!
அமைதி வாழ்வுக் கேற்றது!
எள்ளல் தொள்ளல் அற்றது!
எளிமை நிரம்பப் பெற்றது!

உள்ளம் மிகவும் நெகிழ்ந்தது!
உடனே வேலை தொடர்ந்தது!
பள்ளம் எல்லாம் உயர்ந்தது!
பற்றை எல்லாம் அகன்றது!

பயிரால் வளவு நிறைந்தது!
பாம்பு புற்றும் அழிந்தது!
உயிரும் உளமும் குளிர்ந்தது!
உண்மை உழைப்பு மிளிர்ந்தது!

உனக்கு என்றொரு காணி வேணும்!
உடல் சாய்ந்திட வீடும் வேணும்!
பிணக்கு இல்லாத வாழ்வு வேணும்!
பீடை இன்றியே வாழ்ந்திட வேணும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan