இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தம் சந்திப்பு
வாரம்: 160
01/02/2022 செவ்வாய்
தாயே துணை நீயே!
நயினையில் உறையும் தாயே
நாகபூஷணி உருக் கொண்டாயே
நாற்புறமும் கடல்சூழ் தாயே
நமக்கென்றும் துணை நீயே!

நகுலாம்பிகை எனும் தாயே
நகுலேஸ்வரர் துணை நீயே!
வண்ணை வாலாம்பிகை தாயே
வைத்தீஸ்வரர் துணை நீயே!

கேதீச்சரம் வாழ் கௌரி தாயே
கேதீச்சரர் துணை என்றும் நீயே!
கோணேச்சரம் உறை மாதுமையே
கோணேச்சரரின் துணை நீயே!

முன்னேஸ்வர வடிவாம்பிகையே
முன்னை நாதனின் முதலே நீயே!
மின்னும் மூக்குத்தி மீனாட்சி தாயே
மதுரை சுந்தரேஸ்வரர் துணை நீயே!

காஞ்சி உறை காமாட்சி தாயே
கைலாச நாதரின் துணை நீயே!
காசியில் உறையும் விசாலாட்சி தாயே
கணவர் விஸ்வநாதன் மனத்தில் நீயே!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading