” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 179
21/06/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
கோடை வந்தது! கோடை வந்தது!
——————————————
கோடை வந்தது! கோடை வந்தது!
கொள்ளை அழகுக் கோடை வந்தது!
பீடை நீங்கிய பிரபஞ்சம் தெரியுது!
பிஞ்சு இலைகள் பிறப்பும் காணுது!

வாடை தந்த குளிரும் அகலுது!
வண்ண மலர் வனப்பும் தெரியுது!
ஓடை நீரின் ஒலியும் கேட்குது!
ஒரே புத்துணர்வு உள்ளே பிறக்குது!

ஆடை மாற்றும் ஆசை துளிர்க்குது!
அழகுச் சிலைகள் ஊர்வலம் காணுது!
தாடை வரையும் மறைத்து நின்றது,
தாமே கொஞ்சம் கீழே இறங்குது!

தோடைச் சாறுக்கும் கிராக்கி ஏறுது!
தொலைப் பயணம் முனைப்புக் காட்டுது!
மூடைப் பணமும் கொஞ்சம் கரையுது!
மூளைக்கு சற்று ஓய்வும் கிடைக்குது!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan