மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 181
12/07/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
கல்லுப் படுக்கையிலிருந்து ஓர் கதறல்!
————————————————
கல்லுப் படுக்கையில் நான் படுத்தபடி
கதை சொல்கிறேன் கண்ணே கேளுங்கடி
மல்லாக்காய் கிடந்து மனம் நொந்தபடி
மனதால் சொல்கிறேன் சற்றுக் கேளுங்கடி!

காட்டினில் வளர்ந்தேன் கண்டபடி
கணக்கான கனதிச் சிறு துண்டாக்கி
பாட்டில் போட்டனர் பரிவு ஏதுமின்றி
படுபாவிகள் தம் மனம் எண்ணியபடி!

தூரத்தில் வந்திடும் ஓசை கேட்டபடி
துள்ளி ஓட வென்னால் முடியாதபடி
பாரத்தை நெஞ்சில் போட்டமர்த்தி
படுபாதகம் செய்து படுக்க விட்டபடி!

யாழின் பேரைத் தன்னில் சுமந்தபடி
யௌவனமாய் வருவாள் ஒரு கிழத்தி
ஊழில் செய்த ஏதோ வினையின்படி
உத்தரதேவி வருவாள், தருவாள் பாக்கி!

உதயதேவி என்ற பெண்ணொருத்தி
உரசிச் செல்வாள் நெஞ்சை அழுத்தி
உடரட்ட மெனிக்கே எனும் இன்னொருத்தி
உயரச் செல்வாள் என்மேல் உந்தியபடி!

ரஜரட்ட ரஜனி என்னும் இன்னொருத்தி
ராஜதானி நோக்கி செல்வாள் இஷ்டப்படி
பயமின்றி என் நெஞ்சை மிதித்தபடி
பாய்ந்து செல்வாள் தினம் இரக்கமின்றி!

ஆமை வேகத்தில் நகர்வாள் ஒருத்தி
அசுர வேகத்தில் பறப்பாள் இன்னொருத்தி
ஊமைபோல் கண்ணீர் தினம் சிந்தி
உழன்று சாகிறேன் உணர்வார் எவருமின்றி!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading