மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 194
04/10/2022 செவ்வாய்
“கலை வாணி”
——————
தாமரை மலரில் இருப்பாயே
தாரணி எங்கும் நிறைவாயே
நாவதன் மீதும் உறைவாயே
நாமகள் எனும் பெரும் தாயே

நான்முகன் நாயகி நீயே
நானிலம் ஏற்றிடும் தாயே
வானிலும் உயரிய பூவே
வளர் எழில் பூங்காவே!

ஏட்டிலும் எழுத்திலும் நீயே
எல்லோர் மனதிலும் நீயே
காட்டிடும் அன்பிலும் நீயே
காந்தர்வ அழகியும் நீயே!

முப்போதும் உடை வெண்பருத்தி
மூன்று தேவிகளில் நீ ஒருத்தி
எப்போதும் உனை மனத்திருத்தி
ஏற்பதில் எமக்கோர் மனத்திருப்தி!

உனக்கு மறுபெயர் வாணி
உலகில் நீதான் ராணி
எந்தன் மனதுறை வேணி
ஏந்தினேன் உன்பதம் பேணி!

நன்றி
மதிமகன

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading