” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 194
04/10/2022 செவ்வாய்
“கலை வாணி”
——————
தாமரை மலரில் இருப்பாயே
தாரணி எங்கும் நிறைவாயே
நாவதன் மீதும் உறைவாயே
நாமகள் எனும் பெரும் தாயே

நான்முகன் நாயகி நீயே
நானிலம் ஏற்றிடும் தாயே
வானிலும் உயரிய பூவே
வளர் எழில் பூங்காவே!

ஏட்டிலும் எழுத்திலும் நீயே
எல்லோர் மனதிலும் நீயே
காட்டிடும் அன்பிலும் நீயே
காந்தர்வ அழகியும் நீயே!

முப்போதும் உடை வெண்பருத்தி
மூன்று தேவிகளில் நீ ஒருத்தி
எப்போதும் உனை மனத்திருத்தி
ஏற்பதில் எமக்கோர் மனத்திருப்தி!

உனக்கு மறுபெயர் வாணி
உலகில் நீதான் ராணி
எந்தன் மனதுறை வேணி
ஏந்தினேன் உன்பதம் பேணி!

நன்றி
மதிமகன

Nada Mohan
Author: Nada Mohan