மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 194
04/10/2022 செவ்வாய்
“கலை வாணி”
——————
தாமரை மலரில் இருப்பாயே
தாரணி எங்கும் நிறைவாயே
நாவதன் மீதும் உறைவாயே
நாமகள் எனும் பெரும் தாயே

நான்முகன் நாயகி நீயே
நானிலம் ஏற்றிடும் தாயே
வானிலும் உயரிய பூவே
வளர் எழில் பூங்காவே!

ஏட்டிலும் எழுத்திலும் நீயே
எல்லோர் மனதிலும் நீயே
காட்டிடும் அன்பிலும் நீயே
காந்தர்வ அழகியும் நீயே!

முப்போதும் உடை வெண்பருத்தி
மூன்று தேவிகளில் நீ ஒருத்தி
எப்போதும் உனை மனத்திருத்தி
ஏற்பதில் எமக்கோர் மனத்திருப்தி!

உனக்கு மறுபெயர் வாணி
உலகில் நீதான் ராணி
எந்தன் மனதுறை வேணி
ஏந்தினேன் உன்பதம் பேணி!

நன்றி
மதிமகன

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading