இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 235
26/09/2023 செவ்வாய்
“ வலை பூ”
……………

பின்னிவிட்ட இரும் பிடையே
பின்னின்ற கொடி யிடையாள்
மின்னலிடும் விண் மீனாய்
யன்னலால் தெரியும் ‘வலை பூவாய்!’

கோடியில் மலர்ந்த பூவில்
கூடியமர வண் டொன்று
தேடி வருமென் றஞ்சி-வலை
மூடி வைக்குமே ஓர்சிலந்தி!

வாலையவள் விரித்து விட்ட
வலைக் கண்ணில் தான் சிக்கி
‘’வலை பூவாய்’ ஆகிவிட்ட
வாலிபனை என்ன செய்ய!

செவ்விதழ் தான் திறந்து
செவ்வினிய மொழி பேசும்
பவ்வியப் பறவை யவள்
பாவியர்க் கோர் ‘வலை பூவாய்!’

முற்றத்தில் நின்ற மொந்தன்பூவை
முறித்து வலை வலையாய் சீவி
சுற்றத்துடன் பகிர்ந் துண்ண
சுற்றம் பெருகுமே ‘வலை பூவாய்!’

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading