பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 235
26/09/2023 செவ்வாய்
“ வலை பூ”
……………

பின்னிவிட்ட இரும் பிடையே
பின்னின்ற கொடி யிடையாள்
மின்னலிடும் விண் மீனாய்
யன்னலால் தெரியும் ‘வலை பூவாய்!’

கோடியில் மலர்ந்த பூவில்
கூடியமர வண் டொன்று
தேடி வருமென் றஞ்சி-வலை
மூடி வைக்குமே ஓர்சிலந்தி!

வாலையவள் விரித்து விட்ட
வலைக் கண்ணில் தான் சிக்கி
‘’வலை பூவாய்’ ஆகிவிட்ட
வாலிபனை என்ன செய்ய!

செவ்விதழ் தான் திறந்து
செவ்வினிய மொழி பேசும்
பவ்வியப் பறவை யவள்
பாவியர்க் கோர் ‘வலை பூவாய்!’

முற்றத்தில் நின்ற மொந்தன்பூவை
முறித்து வலை வலையாய் சீவி
சுற்றத்துடன் பகிர்ந் துண்ண
சுற்றம் பெருகுமே ‘வலை பூவாய்!’

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan