இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:237
10/10/2023 செவ்வாய்
அலை ஓசை
——————
இரவு பகல் இடையின்றி
இரையும் கடலின் ஓசை!
பரவும் கடல் பரப்பெங்கும்,
பரவி நிற்கும் இவ்வோசை!

ஓயாத கடல் அலையின்
“ஓ”வென்ற இசை ஓசை!
தாயான கடல், உடலில்
தாங்கி வரும் இவ்வோசை!

வான் மீதே உலாவந்து,
வந்தடையும் ஓர் ஓசை!
தேன் சிந்தும் தமிழோசை,
தேர்ந்து தரும் அலைஓசை!

பாமுகமும், பல பிறவும்
பகர்ந்து விடும் இவ்வோசை!
மேகமெலாம் கடந்து வந்து
மேதினி காண் இவ்வோசை!

உலக மெலாம் இருந்தும்
உடன் செய்தி தருமோசை!
அலைபேசி எனும் பெயரில்
ஆளும் இவ் அலையோசை!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading