சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:237
10/10/2023 செவ்வாய்
அலை ஓசை
——————
இரவு பகல் இடையின்றி
இரையும் கடலின் ஓசை!
பரவும் கடல் பரப்பெங்கும்,
பரவி நிற்கும் இவ்வோசை!

ஓயாத கடல் அலையின்
“ஓ”வென்ற இசை ஓசை!
தாயான கடல், உடலில்
தாங்கி வரும் இவ்வோசை!

வான் மீதே உலாவந்து,
வந்தடையும் ஓர் ஓசை!
தேன் சிந்தும் தமிழோசை,
தேர்ந்து தரும் அலைஓசை!

பாமுகமும், பல பிறவும்
பகர்ந்து விடும் இவ்வோசை!
மேகமெலாம் கடந்து வந்து
மேதினி காண் இவ்வோசை!

உலக மெலாம் இருந்தும்
உடன் செய்தி தருமோசை!
அலைபேசி எனும் பெயரில்
ஆளும் இவ் அலையோசை!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan