ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 238
17/10/2023 செவ்வாய்

“மீண்டும் எழு!”
——————
மெய் தொட்டால் சுருங்குமிலை,
மீண்டும் விரிய மறப்பதில்லை!
கை பட்டால் சுருளும் அட்டை,
கலங்கி உயிர் மாய்ப்பதில்லை!

கல்லடி விழுமே என்றஞ்சி,
காய்க்காது மரம் விட்டதில்லை!
வில்லடி படுமே என்றஞ்சி,
விஜயன் வில்லை விட்டதில்லை!

எட்டாது கொப்பெனச் சிலந்தி,
எடுத்த காரியம் நிறுத்தவில்லை!
எட்டு(ம்) வரை மீண்டெழுந்து,
எட்டியதை, பார் மறக்கவில்லை!

நெப் போலியன் பொனபாற்றும்,
நினைத்த வுடனே வெல்லவில்லை!
தப்போ தவறோ ஏதுமின்றி,
தரணியில் யாரும் நிலைத்ததில்லை!

வெற்றி தோல்வி வாழ்க்கையதன்,
வியத்தகு படிகள் என்றெண்ணி,
வீழ்ந்தால், மறுபடி மீண்டெழுந்து,
வாழ்வோம் தரணியில் என்றென்றும்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading