28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 241
07/11/2023 செவ்வாய்
தீப ஒளியே!
——————
ஐப்பசி,கார்த்திகை இணையும் காலம்!
அகிலமெலாம் தீபம் ஒளிரும் கோலம்!
எம்பசி தீரவென இணைந்திடும் நேரம்!
எப்போது தீருமென ஏங்கிடும் ஓலம்!
ஐப்பசி மாதம் அமாவாசைத் திதியில்,
அணைந்து வருமவ் வழகிய திருநாள்!
எத்திசை நோக்கினும் எரியும் தீபங்கள்!
எழுச்சி தந்திடும் தீபாவளி பெருநாள்!
கார்த்திகை மாதம் பிறந்திடும் பொழுதில்,
கனத்திடும் இதயம், நனைந்திடும் கண்கள்!
நேர்த்தியாய் எங்கும் நிமிர்ந்திடும் தீபங்கள்
நெஞ்சு கரைந்திடும் நீங்கா நினைவுகள்!
கார்த்திகை மாத கார்த்திகைப் பெருநாள்!
கண்ணாய் காத்திடும் கடவுளர் திருநாள்!
நேந்திர மரந்தரும் தண்டுகள் மீததில்,
நிரையாய்,அணியாய்,ஒளிருமே தீபங்கள்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...