” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 246
19/12/2023 செவ்வாய்
நிலா உலா
—————-
நிலாவைப் பார்க்க நானும்..
உலாச் சென்று வந்தேன்!
நலமும் கேட்டு வந்தேன்!
நாடும் பார்த்து வந்தேன்!

கண் மயங்கும் தோற்றம்!
கவரும் உடலின் தேட்டம்!
என்ன என்று சொல்ல!
எங்கு வார்த்தை தேட!

மெல்ல மெல்ல நகர்ந்து..
மேலே இருந்து இறங்கி…
பள்ளம் மேடும் பார்த்து..
பாதம் அவள்மேல் சேர்த்து…

உள்ளம் கொஞ்சம் கூச…
உதடும் மெல்லக் காய…
பள்ளம் மேடும் கடந்து..
பாய்ந்து செனறேன் அருகே!

பாயும்போது கால் தடுக்கி..
பலமாய் விழுந்த அடியாலே..
வாயைத் திறந்து கத்திடவே..
வந்து நின்றாள் என் மனைவி!

நிலா-உலா என தலைப்பு தர…
நினைவுகளை நான் சுழலவிட..
நித்திரை என்னை ஆட்கொள்ள..
நிலவுக்கு நானும் உலா சென்றேன்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan