மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மதிமகன்

“பொங்கலோ பொங்கல்!”
————————————-
புத்தம்புது நெல் எடுத்து
புதுப்பானை பொங்க லிட்டு
சித்தம்மிகச் சேர்ந் துண்டு
சேர்ந்திருக்கும் நாள் இன்று!

கோமய மெழுக் கிட்டு,
கோதுமைக் கோல மிட்டு,
மாமர இலை கோர்த்து,
மங்கல தொங்கல் இட்டு!

வாழையும் கரும்பும் கட்டி,
வண்ணமய மலரும் சூட்டி,
பாளையால் அடுப்பு மூட்டி,
பக்குவமாய் பானை வைத்து…

தீட்டி வைத்த பச்சையுடன்,
தீஞ்சுவை பாலும் சேர்த்து,
பூட்டி வைத்த முந்திரியும்,
பூவதன் தேனும் கலந்து….

சுற்றமெலாம் சுற்றி நின்று,
சுந்தரக் குரவை இசைக்க,
பற்றற்றான் பரமன் புகழ்,
பண்ணுடன் பாடிப் பரவ…

பொங்கி வரும் நேரமதில்,
பொங்கலோ பொங்க லென,
கொங்கு தமிழில் கோஷமிட,
குளிர்ந்திடுமே எம் மனது!!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading