மதிமகன்

“பொங்கலோ பொங்கல்!”
————————————-
புத்தம்புது நெல் எடுத்து
புதுப்பானை பொங்க லிட்டு
சித்தம்மிகச் சேர்ந் துண்டு
சேர்ந்திருக்கும் நாள் இன்று!

கோமய மெழுக் கிட்டு,
கோதுமைக் கோல மிட்டு,
மாமர இலை கோர்த்து,
மங்கல தொங்கல் இட்டு!

வாழையும் கரும்பும் கட்டி,
வண்ணமய மலரும் சூட்டி,
பாளையால் அடுப்பு மூட்டி,
பக்குவமாய் பானை வைத்து…

தீட்டி வைத்த பச்சையுடன்,
தீஞ்சுவை பாலும் சேர்த்து,
பூட்டி வைத்த முந்திரியும்,
பூவதன் தேனும் கலந்து….

சுற்றமெலாம் சுற்றி நின்று,
சுந்தரக் குரவை இசைக்க,
பற்றற்றான் பரமன் புகழ்,
பண்ணுடன் பாடிப் பரவ…

பொங்கி வரும் நேரமதில்,
பொங்கலோ பொங்க லென,
கொங்கு தமிழில் கோஷமிட,
குளிர்ந்திடுமே எம் மனது!!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading