” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

“பொங்கலோ பொங்கல்!”
————————————-
புத்தம்புது நெல் எடுத்து
புதுப்பானை பொங்க லிட்டு
சித்தம்மிகச் சேர்ந் துண்டு
சேர்ந்திருக்கும் நாள் இன்று!

கோமய மெழுக் கிட்டு,
கோதுமைக் கோல மிட்டு,
மாமர இலை கோர்த்து,
மங்கல தொங்கல் இட்டு!

வாழையும் கரும்பும் கட்டி,
வண்ணமய மலரும் சூட்டி,
பாளையால் அடுப்பு மூட்டி,
பக்குவமாய் பானை வைத்து…

தீட்டி வைத்த பச்சையுடன்,
தீஞ்சுவை பாலும் சேர்த்து,
பூட்டி வைத்த முந்திரியும்,
பூவதன் தேனும் கலந்து….

சுற்றமெலாம் சுற்றி நின்று,
சுந்தரக் குரவை இசைக்க,
பற்றற்றான் பரமன் புகழ்,
பண்ணுடன் பாடிப் பரவ…

பொங்கி வரும் நேரமதில்,
பொங்கலோ பொங்க லென,
கொங்கு தமிழில் கோஷமிட,
குளிர்ந்திடுமே எம் மனது!!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan