இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 253
13/02/2024 செவ்வாய்
“பிள்ளைக்கனியமுது”
——————————
அம்மி மிதித்து, அருந்ததி காட்டி,
அடுத்தடுத்து வருடமும் போக்கி,
அம்மா எனவழைக்கும் அப்பேறு,
ஆகவில்லை என்று பெரும்கீறு!

சாதகம், சாத்திரம் பார்த்தோம்!
சாமியை வேண்டி நோற்றோம்!
பாதகம் ஏற்படாது பார்த்தோம்!
பாவ விமோசனம் செய்தோம்!

பிரபல வைத்தியம் நாடினோம்!
பிறபல சோதனை செய்தோம்!
இரவில் உறங்காது உழன்றோம்!
இறைவன் முறையீடு செய்தோம்!

ஆண்டுகள் நகர்ந்தன ஐந்தாய்!
அனல்மேல் இட்ட இரும்பாய்!
பாடுகள் பட்டோம் இருவராய்!
பாவங்கள் அறியாத பாவிகளாய்!

ஆண்டுகள் ஆறு உருண்டோடின!
ஆண்டவன் கண்களும் விழித்தன!
ஆண்மக வொனறு பரிசளித்தான்!
அவனே முதற்கனி எமக்கானான்!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading