30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 254
20/02/2024 செவ்வாய்
“பங்கு நீ”
————
பங்கு நீ! பாதி நீ-என்
பாச மலரே என்றும் நீ!
இங்கு நான்-அங்கு நீ!
இருப்பதேன் விளம்பு நீ!
திங்கள் நீ திசையும் நீ!
தீங்கில்லாத திருவும் நீ!
எங்கள் ஊர் ஒளியும் நீ!
எல்லா மனமும் கவரும் நீ!
எங்கும் நீ எதிலும் நீ!
ஏழை வீட்டு விளக்கும் நீ!
சங்கம் புகழ் சரித்திரம் நீ!
சாளரம் ஊடே சிரிப்பதும் நீ!
பங்குனி மாசத்து பரவசம் நீ!
பாவையர் மனதில் படிவதும் நீ!
கங்குல் வரையும் விழிப்பதும் நீ!
காதலர் வரைகவி ஓவியம் நீ!
அங்கு இங்கென அலைவாய் நீ!
ஆண் டாண்டாய் நிலவாய் நீ!
பங்கம் செய்த பிறையாய் நீ!
பரமன் சடையில் உறைவாய் நீ!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...