” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனம் போன போக்கில்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.12.24
ஆக்கம் 172
மனம் போன போக்கில்

மனம் போன போக்கில்
இனம் காணாது கால்
தூக்குது
கனம் பண்ணும் நீதி,
நேர்மை காணாமல் போய் மலிந்து தாக்குது

நாதியற்று சனம் போதை மீறிப் பாதை மாறி வாழ்வோ பாதி
சீரழிவாக்குது

மெய்யெனும் உடம்பு
பொய்யெனும் நரம்பில்
வரம்பற்ற வாய் சூழ்ந்து
பழுதாக்குது

அது இது வேணும்
வேண்டுமென எதுவும்
போதாதென ஓடி ஓடி மனமோ உழுத்துப்
பொழுது போக்குது

அற்புத நீண்ட வாழ்வு
சொற்ப வயது தாண்ட
கண்ட கண்ட தவறான
பாதை கொண்டு மாண்டு போகுமே

இந்த நோய் மறைந்து
பிறக்கப் போகும் புது
வருடமாவது புத்துயிர்
பெற்றிடுமா ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan