மனித நேயம்

மனித நேயம்

மாற்றம் வேண்டுமே மலரும் நினைவுடனே

தேற்றம் கொண்டே வாழ்வும் சிறந்திடவே

போற்றும் மனிதம் புறப்படுதல் நன்றே

ஏற்றம் தேவையே எங்குமே காணவே

வாட்டும் நெஞ்சங்கள் வளத்துடன் மாறவும்

ஆற்றும் சேவைகள் புனிதமும் ஆகட்டும்

மீட்டும் யாழில் கீதமும் இசைக்குமே

தீட்டும் சொற்களில் தீதும் இன்றியே

சுட்டும் போதிலே சுதந்திரம் பிறக்கட்டும்

சட்டம் என்பதில் சத்தியம் நிலவட்டும்

நீதியின் நிலையும் இருட்டறை இல்லையே

மோதியே வாழ்வதில் பலனும் தோன்றாது

மேவிய பண்புடன் மேலோங்க ஏகுவாய்

காலம் வாழ்த்தவே கடமையைப் பற்றுவாய்

சீலம் உணர்வாய் சீருடன் ஓங்குவாய்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading