மனோகரி ஜெகதீசன்

விருப்பத் தலைப்பு

ஆள்பவர் இவரென்ன ஆண்டவரோ
அடிபற்றி இவர்கிழ்க் கிடக்க
மீள்வதை தொடராது இருக்க
மிதிப்பவர் கால்கழட்டி முடக்கு

அறைகூவிப் பாவியரை அழைத்து
அங்கங்கள் அழுகிடவே சிதைத்து
முறைகெட்டார் முதுகெலும்பு முறித்து புதைகுழியில் புழுவுண்ணப் புதைத்து
முறைமாற்றி நீசெய்திடு வேள்வி
முன்னெமக்கு நிகழ்த்தியதைத் தூவி

முள்ளைமுள்ளால் எடுத்தழித்தல் கடனே.

முப்பொழுதும் மூண்டெழும் கனலை
எப்பொழுது யாரழிக்க வருவார்
அப்பொழுதே ஆறியடங்கும் என்னினம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading