இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தீ

அடுப்பிலே எரிந்தால் தீ
ஆறும் வயிறு

காட்டிலே எரித்தால் தீ அழியும்
வளத்தொடு விலங்கு

நாட்டிலே எரிந்தால் தீ
நாசமே
நாளை என்பதே இல்லையே
இது நாம் கண்ட உண்மையே

தீமை சமைத்திடும் ஆயுதமே தீ
தீயோர் கையகப்படின்

தீட்டு இவரால் தீயைத்
தீண்டாதிருக்க
போட்டு விடுங்கள் பூட்டு

மேலோர் கையே ஏந்தட்டும் ஏற்றடும்
தீயை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading