பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மலைப்பு

அன்னையே தெரோசா நீயோர் புதினம்
கன்னியிடம் தாய்மை கருவிட்ட புனிதம்
புன்னகையே உந்தன் உறவுச் சின்னம்
பூத்தது அதனால் பூமியில் மனிதம்
புகுந்ததே உன்னில் சேவை எண்ணம்
புறமேகாது நின்றதே ஆற்றும் திண்ணம்
அறமோங்கி ஆறியதே
அதனால் மண்ணும்

உதித்தது உன்னில் உயிரோம்பு பிடிவாதம்
உள்நின்று உதைத்த அன்பே அடிநாதம்

பதித்தாய் இந்திய மண்ணில் பாதம்
பழிசுமத்தச் செய்தார் பாவியர் விவாதம்
உமிழ்ந்தும் விரட்டிச் செய்தார் பாவம்
மன்னிப்பும் மன்றாட்டமுமே உந்தன் பாவம்

ஆக்கினை செய்தவரே
பெற்றார் அவமானம்
அவருக்கும் கொடுத்தாய் மன்னிப்பு வெகுமானம்
அருளுற்றிய அன்னையே நீயோர் அவதாரம்
அடுத்தவர் பெறவில்லை உன்னால் சேதாரம்
தடுத்தவரும் தந்தார்
தாமுவந்து பலதரம்
எடுத்துத்தர வைத்தது எழிரசியே உந்திறன்

சேரி சிரிக்கச் செய்தாய் ஆட்சி
சேராமலே சென்றது செய்தவர் சூழ்ட்சி
அவகதி கண்டோரும் அடைந்தார் மீட்சி
அந்தரங்க சுத்திக்கு
அனைத்துமே சாட்சி
சுதந்திரமாயே கொடுக்கின்றாய்
அன்னையாய் காட்சி
சுட்டிடத் தொட்டிட முடியாததே உந்தன் மாட்சி

கொட்டிய அன்பால் கொள்ளையிட்ட அன்னையே
மலைத்தே நிற்கிறேன் உந்தன்
வாழ்க்கை கோலம் உணர்ந்து

மனோகரி ஜெகதீஸ்வரன் .

Nada Mohan
Author: Nada Mohan