” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

தலைப்பூ

மங்களத்தின் அடையாளமே
மங்கையின் தலைப்பூ
பொங்கிடு மகிழ்வோ
அதனது விதைப்பு
தங்கிடு தாலிக்கும்
அதுதரும் வனப்பு
வண்ண வாசனைப் பூக்கள் தருமே
பெண்ணின் கூந்தலில் அமர்ந்திருந்து அழைப்பு
அதுகாணில் ஓடும் அண்டிய களைப்பு

ஒற்றையாயும் கூந்தலில் தொற்றிக்
காட்டும் ஒய்யாரம்
பற்றைக் காடாயும் பரவி நிறையும் காதோரம்

தொட்டிலாயும் ஆடும்
தொடு சரத்தால்
தொட்டுச் சூட்டிடவும் வைக்கும்
அன்பர் கரத்தால்

குமரிக்கும் எழில்கூட்டும்
வண்ணம் தூவி
வண்டிணையும் அழைக்கும்
வாசனை காவி
அமங்கலி தலைப்பூவைப்
பறிப்பர் தாவி
அதுகண்டு வதைபடும்
பார்ப்பார் ஆவி
இதிலென்ன உண்டு நீதி
இதயத்தைத் தொலைத்து விட்டதே மானிட ஜாதி

கிழவிக்கும் கிட்டும்
வருமானம்
விற்பனை கூடி
அழவைக்கும் தலைப்பூவும் அடுத்தநாள் வாடி
அதன்பின்னே அதுவும் வீழும்
மண்ணை நாடி

மனோகரி ஜெகதீஸ்வரன்

பதியப்படவில்லை

Nada Mohan
Author: Nada Mohan