மனோகரி ஜெகதீஸ்வரன்

மீண்டெழு

ஏற்றம் இறக்கம் இரண்டும்
ஏறிக் குந்தும் திரண்டு

ஏற்றம் சிந்தும் இன்பம்
இறக்கம் கொடுக்கும் துன்பம்

இறக்கம் கண்டு சுருங்கின்
பிறப்பை மனதும் வெறுக்கும்
அறத்தை அளந்தும் வெதும்பும்

சிரத்தை கெட்டுச்
சீலமும் சிதறும்
மரத்தைப் போன்றே
மனமும் மாறும்
சிரமும் தாளும்
சிதைவே சூழும்

நிதர்சனம் இதுவே
நிம்மதிக்கும் பழுவே
நீடித்தால் நிலைக்கும் வழுவே

நடுங்கி வீழின்
ஒடுங்குமே நன்மை
விடுபடாது சுழலுமே தீமை
விடுப்பேடாது நிற்குமே வறுமை
எடுபடாது போகுமே நீதி
வடுப்படுமே உந்தன் சந்ததி
மிதிபடுமே உந்தன் சங்கதி

வாட்டும் பிறரின் வக்கரிப்பு
வந்து தாக்கும் நிராகரிப்பு
அதனை நீக்கத்தேவை
யுந்தனுக்கு சுதாகரிப்பு
நீமீண்டெழுந்தாலே அடங்கும் வீனரின் கொக்கரிப்பு

முயல்வைக் கொழுவி
இயலாமையக் கழுவி
மிடுக்கைத் தழுவி
மீண்டெழு

திறனடைக்கும் கலாச்சாரக் கட்டுடையும்
கறைகக்கும்
தீதுடையும் வாதுடையும்
முறையாய் எதுவும் நடக்கும்
தடையும் படுக்கும் தலையும் நிமிரும்
விடையாய் வெற்றியே பிறக்கும்
நடையிலும் நளினம் சிறக்கும்

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading