மனோகரி ஜெகதீஸ்வரன்

ஆறு மனமே

குலையும் உடலின் கட்டு
முதுமை உன்னைத் தொட்டு
அலையும் மனமும் கெட்டு
அதையிதை நாளும் கேட்டு

விலையின் ஏற்றம் கண்டு
விருந்தை மறக்கும் வயிறு
மனதும் சரியும் சுருண்டு
சூழ்ச்சி கண்டு மிரண்டு

வற்றியும் போகும் தனம்
வசமிழந்து மாறும் குணம்
சுற்றியும் பற்றும் சினம்
சுடுகாடாயே மாறும் மனம்

வாட்டிடக் கழறும் உறவும் தினம்தினம்
வந்து காட்டும் நோயும் தரிசனம்
உலகிலே உலவிடுதே இவ்நூதனம்
உள்ளமெல்லாம் இருப்பதோ நரித்தனம்
யாரிங்கு காட்டுவர் கரிசனம்

ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவனிடமே கேளு

மனோகரி ஜெகதீஸ்வரன்.
பதியப்படவில்லை

உறவும் ஒதுங்கும் விட்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading